close
Choose your channels

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் புதிய சாதனை

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகி விஜயலட்சுமி சமீபத்தில் இசையா? திருமணமா? என்ற கேள்வி வந்தபோது மன தைரியத்துடன் இசையை தேர்வு செய்து திருமணத்தை நிறுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிப்பது போல் தற்போது அவர் இசையில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பாடகி விஜயலட்சுமி தான் வைத்திருக்கும் 'காயத்ரி வீணை'யில் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 67 பாடல்களை இசைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் தொடர்ந்து 51 பாடல்களை வீணையில் இசைத்த இவர், தன்னுடைய முந்தைய சாதனையை தற்போது இவரே முறியடித்துள்ளார். இந்த புதிய சாதனையை செய்த விஜயலட்சுமிக்கு அதே மேடையில் 'யுனிவர்சல் ரெக்கார்ட் போரம்` என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த சாதனை குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியபோது, 'வைக்கம் விஜயலட்சுமியின் புதிய சாதனை குறித்த ஆதாரங்களை கின்னர் நிறுவனத்துக்கு அளிப்போம். ஏற்கெனவே 51 பாடல்களை ஒரே நேரத்தில் வீணையில் இசைத்ததால், 52 பாடல்களை இசைக்கவே வைக்கம் விஜயலட்சுமி திட்டமிட்டிருந்தார். ஆனால், தொடர்ந்து 67 பாடல்களை இசைத்த பிறகே நிறுத்தினார் என்று பெருமையுடன் கூறினர்.

இந்த சாதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைக்கம் விஜயலட்சுமி, 'என்னுடைய கனவு நிஜமாகி உள்ளது. இந்த சாதனையை என்னுடைய குருக்கள் மற்றும் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய மானசீக குரு கே.ஜே.யேசுதாஸ்தான்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.