close
Choose your channels

சிம்பு படத்தை தூக்கி நிறுத்துமா வைரமுத்துவின் 'ரத்தம்'

Friday, June 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்ட நிலையில் நேற்று முதல் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பாடலை சிம்புவிற்காக கவியரசர் வைரமுத்து முதன்முதலாக எழுதியுள்ளார்.

'ரத்தம் என் ரத்தம்' என்று தொடங்கும் இந்த பாடல், படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும், படத்தையே இந்த ஒரு பாடல் தூக்கி நிறுத்தும் அளவிற்கு உள்ள வலிமையான வார்த்தைகள் அடங்கிய பாடல் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் ரம்ஜான் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.