close
Choose your channels

தற்கொலை செய்து கொள்ள தயார்! 'வாணி ராணி' நடிகை சபிதா சபதம்

Thursday, May 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 'வாணி ராணி' தொடரில் நடித்த நடிகை சபீதா, அந்த தொடரின் மேலாளருடன் நடுரோட்டில் சண்டை போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் நடிகை சபீதா, மேலாளருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக பல இணையதளங்களும், சமூக இணையதளங்களும் செய்தி வெளியிட்டன.


இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே நடிகை சபீதா விளக்கம் அளித்திருந்தார். அந்த மேலாளர் தனது அப்பா வயது உள்ளவர் என்றும், அவரிடம் தான் கொடுத்த கடனை திரும்பி கேட்கவே அவருடைய வீட்டிற்கு சென்றதாகவும், அப்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும், அதை தவிர அவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும் வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இதே விஷயம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், 'அன்று நடைபெற்ற சம்பவத்தில் இருந்தது நான் தான். அதை மறுக்க வில்லை. ஆனால் எங்களுக்குள் எந்த தகாத உறவும் இல்லை. ஒரே ஒரு நாள் டி,.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பொய்யான செய்தியை பரப்பி என் வாழ்க்கையையே ஊடகங்கள் சிதைத்துவிட்டன. உங்களுக்கு ஒரு வெறும் செய்தியாக வெளிவரும் ஒரு பேப்பர். ஆனால் எனக்கு அது வாழ்நாள் கறை.

இந்த சம்பவத்திற்கு பின்னர் எந்த ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்தாலும் தற்கொலை செய்திருப்பார். ஆனால் எனக்கு தற்கொலையில் நம்பிக்கை இல்லை. அதுமட்டுமின்றி நான் என் அம்மாவை காப்பாற்றியாக வேண்டும். நான் தற்கொலை செய்துவிட்டால் அவர் அனாதையாகிவிடுவார். இருப்பினும் இரண்டு நாட்கள் அவருடன் நான் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை யாராவது வெளியிட்டால் நான் தற்கொலை செய்ய தயாராக இருக்கின்றேன்' என்று அந்த வீடியோ நடிகை சபீதா ஆவேசமாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.