close
Choose your channels

பேய்ப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள 'வீரம்' நடிகை

Monday, July 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனுடன் 'எதிர்நீச்சல்' மற்றும் அஜீத் நடித்த 'வீரம்' ஆகிய படங்களில் நடித்த நடிகை சுஜாகுமார் தற்போது ஒரு புதிய பேய்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி' என்ற வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை புகழ்மணி என்பவர் இயக்கிவருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், தற்போதைய கோலிவுட் சீசனில் வரும் பேய்ப்படங்கள் போல் காமெடி கலந்த பேய்ப்படமாக இது இருக்காது என்றும் முழுக்க முழுக்க திகில் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளதாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தில் சுஜாகுமாருக்கு வித்தியாசமான கேரக்டர் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தன் ரத்தன் மெளலி என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக தெலுங்கில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நாயகியாக மாறிய ஷ்ராவயா (Shravyah) நடித்துள்ளார். இந்த படத்திற்காக ஷ்ராவயா தமிழ் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.