close
Choose your channels

வெங்கட்பிரபுவின் அடுத்த 'சென்னை 28' இரண்டாம் பாகமா?

Wednesday, November 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, நயன்தாரா நடித்த 'மாஸ்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது அடுத்த படத்திற்காக ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் அவர் இயக்கிய 'சென்னை 28' படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னை 28' படத்தில் நடித்த மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் ஆகியோர் மீண்டும் வெங்கட்பிரபு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே நடிகர்கள் மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைவதால் இந்த படம் 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த படம் 'சென்னை 28' படத்தின் தொடர்ச்சி இல்லை என்றும், அதே நடிகர்களுடன் கூடிய முற்றிலும் வித்தியாசமான வேறு படம் என்றும் வெங்கட்பிரபு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.