close
Choose your channels

விறுவிறுப்பாக நடைபெறும் 'விஜய் 59' படப்பிடிப்பு

Monday, October 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போலீஸ் கதையம்சம் உள்ள இந்த படத்தின் விஜய்-சமந்தாவின் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மூன்றாவது பாடலுக்காக படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்துவிட்டதாகவும், ஒருசில வசனக்காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகளுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மற்றொரு நாயகி எமிஜாக்சன் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.