close
Choose your channels

13 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணைந்த நடிகை

Friday, July 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பாடலையாவது பாடிவரும் வழக்கத்தை கடந்த பல வருடங்களாக கடைபிடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சமீபத்தில் பாடிய 'செல்பி புள்ளே' உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகி வருவதும் தெரிந்ததே. அதேபோல், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள 'புலி' படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான்.

ஆனால் தற்போது வந்த புதிய தகவலின்படி, விஜய், ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு டூயட் பாடியுள்ளார் என்பதுதான். இதை ஸ்ருதிஹாசனும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அவருடன் இணைந்து டூயட் பாடலை பாடுவது என்பது அபூர்வமாக நடைபெறும் ஒரு விஷயம் ஆகும். இதற்கு முன்னால் கடந்த 2002-ஆம் ஆண்டு விஜய் நடித்த 'தமிழன்' படத்தில், விஜய்யும் ப்ரியங்கா சோப்ராவும் இணைந்து 'உள்ளத்தை கிள்ளாதே' என்ற பாடலை பாடியுள்ளனர். இந்நிலையில் சரியாக 13 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஒரு நடிகை 'புலி' படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ப்ரியங்கா சோப்ராவுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து பாடிய ஒரே நடிகை ஸ்ருதிஹாசன் தான் என்ற பெருமையும் தற்போது அவருக்கு கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.