close
Choose your channels

'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு விஜய் உதவி

Friday, April 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், சிம்ரன் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்று. இன்று பிரபல இயக்குனராக இருக்கும் எழில் இயக்கிய முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஒரு சிறு காமெடி கேரக்டரில் டவுசர் பாண்டி என்ற நடிகர் நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் பயணி ஒருவருக்கு வழிசொல்லும் காமெடி இன்றும் பிரபலமானது.

கோலிவுட்டில் மிகப்பெரிய காமெடி நடிகர்களில் ஒருவராக வருவதற்கான அத்தனை திறமைகளும் டவுசர் பாண்டியிடம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் வெளியான ஒருசில நாட்களில் அவர் மரணம் அடைந்துவிட்டார்.

இந்த நிலையில் டவுசர் பாண்டியின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதாக செய்தி அறிந்த விஜய், அவருடைய குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.