close
Choose your channels

விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் கைமாறியதா?

Wednesday, July 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் சென்னையில் பல இடங்களை வாங்கியுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட பல கட்டிடங்களை வாங்கிய விஜய், தனது தாயார் ஷோபா பெயரில் சென்னை சாலிகிராமத்தில் திருமண மண்டபம் ஒன்றையும் கட்டியுள்ளார்.

இந்த திருமண மண்டபத்தில்தான் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும். விஜய்யின் ஒருசில பிறந்த நாளிலும் இந்த மண்டபத்தில் ரத்ததானம், கண்தானம் போன்ற முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான விஜய் ரசிகர்கள் அந்த சமயத்தில் இங்கு வந்து ரத்ததானம் செய்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான இந்த மண்டபத்தை தற்போது நிர்வாகம் செய்ய முடியாததால், விஜய் இந்த திருமண மண்டபத்தை லீசுக்கு விட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளுத்துகட்டு' என்ற படத்தை தயாரித்தபோது, அந்த படத்தின் அலுவலகமாக இந்த திருமண மண்டபத்தைதான் சிலகாலம் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபம் தற்போது லீசுக்கு விடப்பட்டதால், எஸ்.ஏ.சி தனது அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.