close
Choose your channels

'தெறி'யின் மகளிர் மட்டும் சிறப்புக் காட்சி

Saturday, April 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்க்கு பெண் ரசிகைகள் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கல்லூரி மாணவிகளில் பலர் விஜய் ரசிகைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க பெண்களுக்கு ஆர்வம் அதிகம் இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் அவர்களால் பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது.

இந்த சங்கடத்தை தவிர்க்கும் வகையில் காரைக்குடி சத்தியன் திரையரங்கு உரிமையாளர் 'தெறி' படம் ரீலீஸ் ஆகும் முதல் நாளில் காலை 7 மணிக்கு மகளிருக்காக மட்டும் ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். இதனால் விஜய் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகைகளுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

காரைக்குடியை போலவே சென்னை, மதுரை, கோவை உள்பட பெருநகரங்களிலும் பெண்களுக்காக முதல் நாளில் ஒரு காட்சியை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களின் மூலம் ஏற்பட்டு வருகிறது. பெண் ரசிகைகளின் கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.