close
Choose your channels

'விஜய் 59' இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மீண்டும் சமந்தா

Monday, August 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று விஜய் நடித்த 'புலி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்துவிட்ட நிலையில், எவ்வித பரபரப்பும் இன்றி விஜய் இன்றுமுதல் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சென்னை ஈசிஆர் சாலையில் இன்று முதல் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவு ஆகியவற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விஜய், சமந்தா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொள்கின்றானர். இந்த படப்பிடிப்பு 25 நாட்கள் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கிவரும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகின்றனர். மேலும் ராதிகா சரத்குமார்,பிரபு, மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கின்றார். இந்த திரைப்படம் ஜி.வி.பிரகாஷுக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.