close
Choose your channels

ஆரஞ்சு மிட்டாய் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்சேதுபதி

Monday, August 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி தயாரித்த நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடமும் ஊடகங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விஜய்சேதுபதி மீண்டும் பிஜுவிஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த தகவலை பிஜு விஸ்வநாத்தும் உறுதி செய்துள்ளார்.

தனது அடுத்த படத்தின் கதை தயாராகிவிட்டதாகவும், அந்த படத்திலும் விஜய்சேதுபதியே ஹீரோவாக நடிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தை விஜய்சேதுபதி தயாரிப்பாரா? என்பது குறித்த தகவல் இனிமேல்தான் தெரியவரும்.

விஜய்சேதுபதி தற்போது இடம் பொருள் ஏவல், மெல்லிசை, நானும் ரெளடிதான், நலன் குமாரசாமி இயக்கி வரும் படம், கார்த்திக் சுப்புராஜின் இறைவி, மற்றும் ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கும் படம் என பிசியாக இருந்து வரும் நிலையிலும் பிஜூ விஸ்வநாத்தின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் விஜய்சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் புதிய படத்திலும், காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.