close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த அவதாரம்

Wednesday, May 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இன்றைய தேதியில் அதிக திரைப்படங்களில் நடித்து வருபவரும், ஒவ்வொரு வருடமும் அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்வதும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மட்டுமே. இந்த பிசியான பணியிலும் அவர் அடுத்த அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

ஆம், விஜய்சேதுபதி ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதவுள்ளார். ஏற்கனவே அவர் 'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்காக இயக்குனர் பிஜூ விஸ்வநாத் அவர்களுடன் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பிஜூ விஸ்வநாத் இயக்கும் படம் ஒன்றுக்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதோடு முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது.

விஜய்சேதுபதி தற்போது 'புரியாத புதிர்', 'சேரன் இயக்கும் படம்', 'மாமனிதன்', 'ஜூங்கா', 'சீதக்காதி', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', '96' , 'அநீதி கண்கள்', 'கருப்பன்', 'விக்ரம் வேதா' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.