close
Choose your channels

ராஜஸ்தானில் '10 எண்றதுக்குள்ள' கிளைமாக்ஸ்

Tuesday, July 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே பாக்கியிருப்பதால், அந்த காட்சிகளை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் விஜய் மில்டன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

'10 எண்றதுக்குள்ள' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் குறித்து விஜய் மில்டன் கூறியபோது, 'இந்த படத்தில் கிளைமாக்ஸில் ரயில் மட்டும் சாலை இரண்டிலும் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்க திட்டமிடப்பட்டது. ரயில் ஸ்டண்ட் காட்சிகளை பொறுத்தவரை இரண்டு ரயில்வே டிராக்குகள் ஒரே இடத்தில் அமைந்தவாறு அதே நேரத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி தரக்கூடிய இடமாக நாங்கள் தேடி வந்தோம். தற்போது நாங்கள் எதிர்பார்த்தவாறு ராஜஸ்தானில் உள்ள ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அந்த பகுதியில் ரயில் ஸ்டண்ட் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் அவர்களின் ஸ்டண்ட் பயிற்சியில் எடுக்க உள்ளோம். விரைவில் எங்கள் படக்குழு ராஜஸ்தான் செல்லவுள்ளது.


அதே நேரத்தில் சாலையில் எடுக்கப்படவுள்ள சேஸிங் காட்சிகளின் ஸ்டண்ட் பயிற்சிக்கு ஹாலிவுட்டில் இருந்து சண்டைப்பயிற்சியாளர் வரவழைக்கப்படவுள்ளார்' என்று கூறியுள்ளார். மிரட்டலான கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுடன் கூடிய இந்த படத்தில் விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கிஷெராஃப் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சார்மி சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் விஜய் மில்டன். டி.இமான் இசையமைக்கும் இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.