close
Choose your channels

த்ரில் படத்தில் நடிக்கிறார் சந்தானம் பட நாயகி

Thursday, July 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா, விமலுடன் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களில் நடித்த நடிகை விசாகா சிங், சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் பொங்கி எழுந்த சம்பவம் ஒன்றை பார்த்தோம். அவருடைய துணிச்சலான கருத்துக்கு த்ரிஷா உள்பட முன்னணி நடிகைகள் ஆதரவு கொடுத்ததும் தெரிந்ததே. இந்நிலையில் தமிழில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க விசாகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் அவருடைய துணிச்சலுக்கேற்ற த்ரில்லான வேடம் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த த்ரில் படமான 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிசர்மா முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ஒன்றில் நடிக்க விசாகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை காமெடி மற்றும் ரொமாண்டிக் கேரக்டரில் பார்த்த விசாகா சிங்கை இந்த படத்தில் வித்தியாசமான த்ரில்லிங்கான வேடத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாறில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும், மூணாற்றில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படும் என்றும் மணிசர்மா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.