close
Choose your channels

விஷாலின் அதிரடி திட்டத்திற்கு பிரகாஷ்ராஜ் முன்னாள் மனைவி உதவி

Thursday, June 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால் அவ்வப்போது நலிந்த மற்றும் சீனியர் நடிகர், நடிகைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில் குடும்பத்தினர்களால் கைவிடப்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள சீனியர் நடிகர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பட்டியலை பார்த்து அவர்களுடைய தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தபோது பல சீனியர் நடிகர்கள் குடும்பத்தினர்களின் ஆதரவு இன்றி கஷ்டப்படுவது தெரியவந்ததாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில் சீனியர் நடிகர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றை நிறுவலாம் என்று நடிகை லலிதாகுமாரி ஆலோசனை கூறியதாகவும் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இதற்காக லலிதாகுமாரி ஈசிஆர் பகுதியில் உள்ள தன்னுடைய நிலத்தை தர முன்வந்துள்ளதாகவும், இந்த முதியோர் இல்லம் விரைவில் தொடங்கப்படும் என்றும் விஷால் கூறினார். மேலும் இந்த முதியோர் இல்லத்தில் தங்கும் வசதி, தரமான உணவு, மருத்துவ வசதி, நூலகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து நடிகையும், பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதகுமாரி கூறியபோது, முதியோர்களுக்காக ஒரு இல்லம் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நடிகர் சங்கத்துடன் கைகோர்த்து தற்போது இந்த முதியோர் இல்லம் ஆரம்பிக்கும் முயற்சிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று கூறியுள்ளார்.

நடிகை லலிதகுமாரி பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் மகளும், கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.