close
Choose your channels

ரஜினியின் இடத்தில் இருந்து பணியை தொடங்கும் விஷால் குழு

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்று அதில் விஷால் தலைமையிலான நம்ம அணி கிட்டத்தட்ட அனைத்து பதவிகளுக்கும் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவின் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பதவியேற்பு விழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பதவியேற்ற மறுநிமிடமே ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளதால், ரஜினிகாந்த் அவர்களின் இடத்தில் இருந்து விஷால் குழுவினர் தங்கள் பணியை தொடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவிற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களது குடும்பத்தோடு வர வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகள் நிர்வாகிகள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பணிபுரிய உள்ளதால் அனைத்து தயாரிப்பாளர்களும் இந்த விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டும் என்றும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும் என்றும் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார் என்றும் விஷால் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.