close
Choose your channels

சென்னை மெட்ரோ ரயிலில் விஷ்ணு காதல்

Sunday, July 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை நகர மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கட்கிழமை தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. பயணிகளின் பெரும் ஆதரவை பெற்றுள்ள மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பார்வையிடுவதற்காக ஏராளமானோர் வருகின்றனர். சென்னை மக்களின் மனதை கவர்ந்துள்ள இந்த மெட்ரோ ரயில் தற்போது கோலிவுட் பார்வையிலும் பட்டுவிட்டது. முதன்முதலாக இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படம் ஒன்றிற்காக விரைவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன், தற்போது "போடா ஆண்டவனே என் பக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு, பிரயாகா மார்ட்டின் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் விஷ்ணுவும், பிரயாகாவும் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது காதல் ஏற்படுவதாக ஒரு காட்சி வருகிறது. இந்த காட்சியை புறநகர் ரயிலில் படமாக்க முதலில் இயக்குனர் ஆர்.கண்ணன் முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் சேவை தொடங்கி விட்டதால், மெட்ரோ ரயிலிலேயே இந்த காட்சியை எடுக்க முடிவு செய்துள்ள இயக்குனர், இதற்காக அனுமதி கோரி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சத்யா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.