close
Choose your channels

விவேக்கை உணர்ச்சிவசப்பட செய்த விஜய்யின் அக்கறை

Monday, September 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக அனிதாவின் மரணம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்த நிலையில் இன்று காலை முதல் லேசாக அந்த செய்தி மங்கியது போல் தெரிந்தது. ஆனால் அனிதாவை மீண்டும் டிரெண்டுக்கு கொண்டு வந்த பெருமையை தளபதி விஜய்யின் விசிட் செய்தது

ஆம், இன்று அரியலூர் சென்று அனிதாவின் குடும்பத்தினர்களை அக்கறையோடு விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய், எந்த உதவி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்று கூறிவிட்டு திரும்பியுள்ளார். இதனால் மீண்டும் அனிதா சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளார்.

விஜய்யின் இந்த அக்கறை, கருணை குறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'அன்பு விஜய்! உங்கள் செயல் என் உள்ளத்தை உணர்ச்சி வசப்படச் செய்கிறது. உங்கள் அக்கறைக்கும்,கருணைக்கும்' என்று கூறியுள்ளார்.

ஒரு கலைஞன் என்பவர் தனது ரசிகர்களை மகிழ்விப்பவராக மட்டுமே இருப்பார். ஆனால் விஜய் போன்ற ஒரு மனிதாபிமானம் உள்ள கலைஞர் மட்டுமே  அவர்களின் இன்பதுன்பங்களிலும் கலந்து கொள்வார். தளபதி விஜய்க்கு நமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.