close
Choose your channels

அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியல் முக்கியம். விஜய்சேதுபதி

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் மரணத்திற்காக சென்னை லயோலா கல்லூரியில் 'அனிதா நினைவேந்தல்' கூட்டம் நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விஜய்சேதுபதி பேசியபோது 'அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியலை கற்று கொடுக்க வேண்டியது அவசியம்' என்று பேசினார். அவர் மேலும் கூறியதாவது:
'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம்.
போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை சுலபமா கலைச்சுடறாங்க. அதனால் இனி வரும் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக என்னவெல்லாம் செய்யலாம் என்பதை யோசிக்கலாம். அதே மாதிரி நம்ம தலைமுறையினருக்கு அரசியல் பற்றிய அறிவை நிறைய ஊட்டணும்னு ஆசைப்படுறேன். அடுத்த தலைமுறையினருக்கு சினிமாவை விட அரசியல் கற்றுத் தரணும். அதுதான் முக்கியம். சாதி மட்டும்தான் இந்தச் சமுதாயத்தைப் பிரிச்சு வைக்கிறது. நம்மைப் போராட தயங்க வைக்குதுனு நான் நினைக்கிறேன். அதை நாமதான் உடைச்சு எரியணும்''
இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.