close
Choose your channels

பரதனை விஜய் தேர்வு செய்தது ஏன்?

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தின் இயக்குனர் 'பரதன்' என்று தகவல் நேற்று வெளியானது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தகவல் வெளியானதும் கோலிவுட்டில் பலர் ஆச்சரியம் அடைந்ததாக கூறப்படுகிறது. மோகன் ராஜா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சசிகுமார், கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல வெற்றி பட இயக்குனர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருந்த நிலையில் 'அழகிய தமிழ்மகன்' என்ற சுமாரான படத்தை இயக்கிய இயக்குனர் பரதனுக்கு விஜய் வாய்ப்பு அளித்திருந்தது பலரை வியக்க வைத்துள்ளது

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு விஜய்யை சந்தித்த பரதன் ஒரு கதையை கூறியதாகவும், ஆனால் விஜய் அந்த கதையை தேர்வு செய்யாமல் வேறொரு கதையை சொல்லி, அந்த படத்தை இயக்குமாறு கூறியதாகவும், அந்த படம்தான் 'அழகிய தமிழ்மகன்' என்று கூறப்படுகிறது.

ஒருவேளை பரதன் கூறிய கதையை இயக்கியிருந்தால் அது வெற்றி படமாக ஆகியிருக்கும் என்றும் அதுமட்டுமின்றி பரதனுக்கும் கோலிவுட்டில் ஒரு மதிப்பான இடம் கிடைத்திருக்கும் என்றும், தன்னுடைய முடிவால் பரதனுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுகட்டவே விஜய் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது.

பரதனை இயக்குனராக அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். ஆனால் விஜய்யின் இந்த அறிவிப்பில் அவருடைய பெருந்தன்மை அடங்கியுள்ளது என்பது வெகுசிலருக்கு மட்டுமே புரிந்த உண்மை. தற்போது கலாய்ப்பவர்கள் காததூரம் ஓடும் அளவுக்கு இந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டிய பொறுப்பு பரதனுக்கு இருக்கின்றது என்பதும் மற்றொரு உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.