close
Choose your channels

போதை கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Thursday, April 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அழகில்லாத கணவனை கிரைண்டர் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்த மனைவி, டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன் என்ற வரிசையில் இன்று 24 மணி நேரமும் போதையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவருடைய மனைவி ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வடலூர் அருகே நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தானபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்பவருக்கு தவமணி, தமிழ்மணி என இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி தமிழ்மணி வீட்டிற்கு கணபதி செல்லும்போதெல்லாம் முழு போதையில்தான் செல்வாராம். போதையில் மனைவியிடம் தகராறு செய்வதே அவருக்கு வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல், தமிழ்மணியின் வீட்டிற்குச் சென்ற கணபதி, போதையில் தொந்தரவு செய்துள்ளார். அப்போது, கோவிலுக்கு படைப்பதற்காக, வடை சுட்டுக்கொண்டிருந்த தமிழ்மணி, ஆத்திரத்தில், கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெய்யை, கணபதி மீது ஊற்றியுள்ளார்
இதனால் வலியால் அலறித்துடித்த கணபதி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முகம் முழுவதும் வெந்துபோன நிலையில் கணபதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கணபதியிடம் காயத்திற்கான காரணம் கேட்டபோது தன் மீது இரண்டு பேர் அமிலம் வீசியதாகத் தெரிவித்தார். ஆனால் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தபோது அவருடைய மனைவி தமிழ்மணிதான் சுடச்சுட எண்ணெயை ஊற்றியது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.