close
Choose your channels

முதல்வர் பதவியை நோக்கி சசிகலா.. விட்டு கொடுக்கின்றாரா ஓபிஎஸ்?

Saturday, February 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வர்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றில் முதல்வர் எடுத்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மத்திய அரசின் முழு ஆதரவும் முதல்வருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சசிகலா வரும் 9ஆம் தேதி முதல்வர் பதவியை ஏற்க உள்ளதாகவும், இதனை பன்னீர்செல்வமே முன்மொழிவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதை உறுதி செய்ய நாளை பிற்பகல் 1.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் சசிகலா கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் சசிகலாவுக்கு ஆதரவை அதிகரிக்க அவர் முதல்வர் பதவியை ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு திட்டத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.