close
Choose your channels

வேகத்தைடையை கவனிக்காக ஓட்டுனரின் அலட்சியத்தால் பெண் பயணி பலி

Friday, July 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வேகத்தடையை கவனிக்காமல் மிக வேகமாக வேகத்தடை மீது பேருந்து ஏறி இறங்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி அடிக்கப்பட்டனர். இதில் சென்னையை சேர்ந்த சுமதி என்ற அரசு ஊழியர் பேருந்தின் மேற்கூரையில் மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரம்பலூரில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்தை ஓட்டி வந்த ஜெயராமன் என்ற ஓட்டுனர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் முன் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் மிக வேகமாக பேருந்தை இயக்கினார். இதனால் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. அப்போது பேருந்தில் பயணம் செய்த சுமதி என்ற பயணி நிலைத்தடுமாறி பேருந்தின் மேற்கூரை மீது வேகமாக மோதி தலையில் பலத்த காயமடைந்து சில நிமிடங்களில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மேலும் சில பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஓட்டுனரின் அஜாக்கிரதையால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓட்டுனர் ஜெயராமனிடம் கோயம்பேடு போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.