close
Choose your channels

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியில் தொழிலாளி உயிரிழப்பு

Saturday, June 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சில வாரங்களுக்கு முன் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. ஒரு நாள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. இதையடுத்து சேதமடந்த கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு இடிக்கும் பணி சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
இன்று கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சரத் என்பவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்துக்கு காரணமான விபத்து என்ன, அது எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து, கட்டிட இடிப்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்துக்கு மேல் தீ அணையாமல் எரிந்த விபத்தில் ஒருவர்கூட உயிரழக்காதபோது அதனால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தை இடிக்கும்போது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சென்னை மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.