close
Choose your channels

கமல் நண்பரின் இணையதளம் திடீர் முடக்கம். காரணம் என்ன?

Wednesday, March 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயமோகன் தனது இணையதளத்தில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ஒருசில கட்டுரைகளை எழுதி இருந்தார். இதன் காரணமாக இந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்தில் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியின்போது மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுகுறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் 'இந்து முல்லாக்கள் உருவாக அனுமதிப்போமா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அந்த கட்டுரையில் பிரணவானந்தா போன்றோர் இந்துமதத்திற்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்க மதவிரோத தடுப்புச் சட்டத்தை இயற்ற வழிகோலுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜெயமோகனின் இணையதளத்தை முடக்கியுள்ள ஹெக்கர்கள் 'இந்து முல்லாக்கள் உருவாக அனுமதிப்போமா?' என்ற கட்டுரை உள்பட ஒருசில கட்டுரைகளை நீக்க்யுள்ளனர். குறிப்பாக மார்ச் 24ஆம் தேதிக்கு பின்னர் அவர் பதிவு செய்த எந்த கட்டுரையையும் இணையதளத்தில் காணவில்லை. கமலுக்க்கு ஆதரவாக எழுதியதால் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் முடக்கப்பட்டதாக கூறப்படினும் இதுகுறித்து ஜெயமோகன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.