close
Choose your channels

கடைசி நிமிடத்தில் அண்ணனை தள்ளிவிட்டு தாலி கட்டிய தம்பி ! மணமகள் வீட்டார் அதிர்ச்சி

Friday, June 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருப்பத்தூரில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகளுக்கு தாலி கட்ட வேண்டிய மணமகனை அவரது தம்பி கீழே தள்ளிவிட்டு திடீரென தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த காமராஜ் மகன் ராஜேஷூக்கும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரிக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை திருப்பத்தூர் வெண்கல்குன்றம் பாலமுருகன் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. உற்றார் உறவினர்கள் கூடியிருக்க, புரோகிதர் மந்திரம் கூட மணமக்கள் மணமேடைக்கு வந்தனர். இந்த நிலையில் தாலி கட்டும் கடைசி நேரத்தில் மணமகள் ராஜேஷை அவரது சகோதரர் வினோத் திடீரென தள்ளிவிட்டு அவரது கையில் இருந்த தாலியை பிடுங்கி மணமகள் காளீஸ்வரி கழுத்தில் கட்டினார். இதற்கு மணமகள் தரப்பில் இருந்தும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து வினோத்திடம் மணமகள், மணமகன் வீட்டார் விசாரித்தபோது, அண்ணன் ராஜேஷூக்கு பெண் பார்க்கக் சென்றபோதே, இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் ரகசியமாக பேசிவைத்தபடி கடைசி நேரத்தில் அண்ணனை தள்ளிவிட்டு தாலிகட்டியதாகவும் உண்மையைபோட்டு உடைத்தார் வினோத். பின்னர் இருவீட்டாரும் சமாதனம் அடைந்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.