close
Choose your channels

சென்னை மெரீனாவில் கடலில் இறங்கிய மாணவர்கள். பதட்டத்தில் போலீசார்

Wednesday, March 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விவசாயிகள் மற்றும் நெடுவாசல் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட தொடங்கியுள்ளனர். ஒருபக்கம் மாணவர்கள் கூடக்கூட அவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மாணவர்கள் கடலில் இறங்கி போராட தொடங்கிவிட்டதால் போலீசார் செய்வதறியாது திகைப்படைந்துள்ளனர்.
கடலில் இறங்கியுள்ள மாணவர்களை கைது செய்ய போலீசார் முயற்சி செய்கையில் இளைஞர்கள் மேலும் கடலுக்குள் செல்வதால் இளைஞர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கடலுக்குள் இறங்கி இளைஞர்கள் போராடி வரும் செய்தி சமூக வலைத்தளங்கள் மூலம் காற்றுத்தீ போல பரவி வருவதால் சென்னை மெரீனாவை நோக்கி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்து சென்று கொண்டிருப்பதாகவும், அவர்களை தடுக்க போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. தமிழ் இளைஞர்களின் இன்னொரு எழுச்சி தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.