close
Choose your channels

100 வருட தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை: சிம்புவின் வித்தியாசமான முயற்சி

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ சாதனைகள், புதிய முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமா செய்யாத, ஏன் கேள்விகூட படாத புதிய முயற்சி ஒன்றை நடிகர் சிம்பு தனது அடுத்த படத்தில் செய்து வருகிறார்.

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் பின்னணி இசை உள்பட அனைத்து போஸ்ட் புரடொக்ஷன்களும் மேற்கொள்ளப்படும். ஆனால் முதல்முறையாக பின்னணி இசையை முதலில் முடித்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்புக்கு செல்கிறார் சிம்பு.

ஆம், சமீபத்தில் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த படம் குறித்து குறிப்பிடுகையில், 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் பாடல்களும் இல்லை, இடைவேளையும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், அந்த பின்னணி இசைக்கேற்ப தற்போது படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சிம்புவின் புதிய முயற்சி வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.