close
Choose your channels

தனுஷ் பட நடிகையின் பதவியை பறிக்க மத்திய அரசு முடிவு

Monday, May 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினி இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவரது கேரக்டரை திரையில் பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை கஜோல் தற்போது வகித்து வரும் பிரசார் பாரதி போர்டு உறுப்பினர் பதவியை பறிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி போர்டில் உறுப்பினராக உள்ள நடிகை கஜோல் மூன்று முறைக்கு மேல் தகவல் தெரிவிக்காமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த அமைப்பின் விதிமுறைகளின் படி, தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பங்கேற்காததால் அவரது உறுப்பினர்களின் பதவியை பறிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து கஜோலின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ` குடும்ப நிகழ்வுகள், மருத்துவ காரணங்கள் மற்றும் முன்பே கொடுக்கப்பட்ட கால்ஷீட் விவகாரங்களால் அவரால் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை` என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.