உயர்தர மருத்துவக் கருவிகளைக் கொண்டு கொரோனாவிற்கு தீவிர சிகிச்சை வழங்கும் தமிழக அரசு!!!

 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய அளவில் கொரோனாவிற்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கும் மருத்துவ மனைகளின் பட்டியலிலும் தமிழகத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனையே முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் அதிகப் பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதிலும் தமிழகமே சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது.

அந்த வைகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவினால் 80-90% பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்களுக்கு உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் கடந்த ஜுன் 23 ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு 90% நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்த நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிந்து வந்தனர். இவர் தற்போது 90 நாட்களுக்குப் பின் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். அதேபோல ஐயப்பன் என்பவரும் 80% நுரையீரல் பாதிப்புடன் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாகச் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு அதிகமாக இருந்தபோதிலும் தமிழக அரசு முறையான சிகிச்சை வழங்கியதாகப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அதைத்தவிர குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையிலும் தமிழகமே முதலிடம் பெற்றிருக்கிறது எனக் கூறப்படும் நிலையில் அதிகப் பாதிப்பு இருந்தாலும் தமிழக மருத்துவர்கள் போராடி உயிரைக் காப்பாற்றி விடுவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

More News

இப்பதான் ஆண்டவர் உனக்கு நல்லபுத்தி கொடுத்துருக்கான்: அக்சராஹாசன் படத்தின் டீசர்

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற படத்தின் படப்ப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று

ரஜினிக்கு அவரே எழுதிய பஞ்ச் வசனங்கள்: 'அண்ணாத்த' அப்டேட் 

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக ரஜினி இல்லாத காட்சிகளின்

அஜித் இல்லாமலேயே ஆரம்பிக்கப்பட்ட 'வலிமை' படப்பிடிப்பு: பரபரப்பு தகவல் 

தல அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்டமான திரைப்படம் 'வலிமை'

கொரோனாவுக்கு பலியான பிரபல காமெடி நடிகர்: திரையுலகம் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் திரையுலகினர் எதையும் விட்டுவைக்கவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் உண்டா? அவரே அளித்த விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள்