முதல்வர் விழாவில் புளிசாதம் சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம்!

விராலிமலை அருகே தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்று அங்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் திருநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்காக திருநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலர் பட்டி, நாயக்கன்பட்டி, மேலகளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பெண்களும் குழந்தைகளும் வேன் மூலம் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட அவர்களுக்கு எலுமிச்சை சாதம், புளி சாதம் முட்டையுடன் கூடிய ஒரு தண்ணீர் பாட்டிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு அன்று மாலை வீட்டிற்கு திரும்பிய பொதுமக்கள் பொட்டலங்களில் இருந்த உணவை சாப்பிட்டு விட்டு உறங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் வள்ளிக்கண்ணு (40), புவனேஸ்வரி (40), சத்யா (25) உள்ளிட்ட 34 பெண்கள், 4 ஆண்கள், ஒரு சிறுமி, ஒரு சிறுவன் ஆகியோருக்கு வாந்தி மயக்கம் போன்றவை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சில தினங்களில் இவர்கள் வீடு திரும்புவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

More News

ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர் கூட இல்லை ஏன்? உண்மையை உடைக்கும் முன்னாள் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.

நிரூபிக்கப்படாத மருந்தை ஏன் பரிந்துரை செய்கிறீர்கள்? ஷர்வர்தனுக்கு ஐஎம்ஏ சரமாரி கேள்வி!

அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யாத கொரோனில் மருந்தை ஏன் கொரோனா வைரஸ் துணை சிகிச்சை மருந்தாகப் பரிந்துரைக் கிறீர்கள் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ

US அதிபர் டிரம்ப்- கிம்முக்கு லிப்ட் கொடுக்க நினைத்தாரா? வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவும் வடகொரியாவும் கடந்த 1960 களில் இருந்தே எலியும் பூனையுமாக செயல்பட்டு வருகின்றன.

'மாஸ்டர்' போல் ஒரு திரைப்படம் பாலிவுட்டுக்கு தேவை: இயக்குனர் அனுராக் பாசு

தமிழில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் பொதுமக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்ததுபோல பாலிவுட்டிலும் ஒரு படம் தேவை என பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு கூறியுள்ளார்

இணையத்தில் வைரலாகும் நடராஜனின் மனைவி, மகள் புகைப்படம்!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தார். நெட் பவுலராக சென்றிருந்த நடராஜன் ஒரு நாள் போட்டி