close
Choose your channels

ஹத்ராஸில் அடுத்த கொடூரம்… 4 வயது குழந்தையை உறவினரே சீரழித்த சம்பவம்!!!

Wednesday, October 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த மாதம் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கு விசாரணையில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் உயிரிழந்தப் பெண்ணை காவல் துறையினரே தகனம் செய்த விவகாரத்தைக் குறித்து நேற்று அலிகார் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கின் விசாரணையே முடிவடையாத நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தத்தடுத்த பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று கல்லூரி வளாகத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவம் குறித்த செய்திகள் வெளியான நிலையில் தற்போது 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருக்கிறது. இந்தச் சம்பவத்தை அக்குழந்தையின் உறவினரே செய்திருக்கிறார்.

சாஸ்னி பகுதியில் 4 வயது குழந்தையை உறவினரே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் காவல் துறையினர் அவரைக் கைது செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபோல தொடரும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு உத்திரபிரதேச மாநில அரசாங்கத்திற்கு தற்போது நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய சம்பவங்களால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.