close
Choose your channels

சொந்த மகள்போல பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய காவலர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்!

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிறைமாதக் கர்ப்பிணியான பெண் போலீஸ் ஒருவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சென்னையில் தவித்து வந்துள்ளார். அவருக்கு சொந்தப் பந்தம்போல உடன் பணியாற்றும் காவலர்களே வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை யானைகவுளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த ஆண்டு ஜெயேந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது நிறைமாதக் கர்ப்பினியாக உள்ள விஷ்ணுபிரியா தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகாப்பு பற்றியும் அவர் சிந்திக்கவில்லை.

இந்நிலையில் யானைகவுளி காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் அனைவரும் இணைந்து விஷ்ணுபிரியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 15 பொருட்களுடன் கூடிய தட்டு, 5 வகையான சாப்பாடு என அசத்தியுள்ளனர்.

மேலும் பக்கத்து காவல் நிலையத்தில் இருந்தும் விஷ்ணுபிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு காவலர்கள் வருகை தந்து எங்கள் வீட்டு பெண் என்று உரிமை கொண்டாடிய சம்பவம் தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவலர்கள் சீருடையில் ஆரத்தி எடுக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.