close
Choose your channels

பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பதிவு செய்த ஆசிரியை வீட்டுக்கு தீவைப்பு!

Monday, February 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஒவ்வொரு இந்தியனும் பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் உள்ள நிலையில் ஒருசிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவு செய்து, எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் வேலையை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஜீலிகாபீ மமதாபூர் என்ற் தனியார் பள்ளி ஆசிரியை புல்வாமா தாக்குதல் குறித்து தனது வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் கி ஜெய்ஹோ என்றும் பாகிஸ்தானை விரும்புவதாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்தை பதிவுசெய்த சில நிமிடங்களில் அவரது வீட்டின் குவிந்த பொதுமக்கள் வீட்டின் மீது கற்களை எறிந்தனர். ஒருசிலர் உணர்ச்சி வேகத்தில் ஆசிரியையின் வீட்டின்முன் தீவைத்தனர். இதனால் வீட்டின் ஒரு பகுதி தீயால் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த ஆசிரியையும், அவருடைய வீட்டிற்கு தீ வைத்த ஆறு பேர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.