close
Choose your channels

பிரபல வில்லன் நடிகரின் வீட்டுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் என்பதும் இவர் ஆர்கே செல்வமணி இயக்கிய ’கேப்டன் பிரபாகரன்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவ்வப்போது அரசியலில் ஈடுபட்டு வருவார் என்பதும் நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூரலிகான் அதன் பின்னர் திடீரென தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் நடிகர் மன்சூரலிகான் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர்அலிகான் தனது வீட்டை அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியதாகவும், அதனால் இந்த சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.