close
Choose your channels

கொரோனாவில் இருந்து மீண்டதும், மீண்டும் பணியை தொடங்கிய அமிதாப்!

Monday, August 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவில் இருந்து மீண்டதும், மீண்டும் பணியை தொடங்கிய அமிதாப்!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வருக்கும் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் அவர்கள் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொருவராக கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அமிதாப்பச்சன், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்திற்கு பின் தற்போது மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார். ’கெளன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 12வது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் அதில் தான் கலந்து கொண்டதாகவும் அமிதாப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து, அதுகுறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்

கடந்த 2000ம் ஆண்டு தொடங்கிய ‘கெளன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பதும், இந்த 20 ஆண்டுகளில் 11 சீசன்கள் முடிவடைந்து தற்போது 12வது சீசன் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 3வது சீசன் தவிர அனைத்து சீசன்களையும் அமிதாப்பச்சன் தான் தொகுத்து வழங்கினார் என்பதும், மூன்றாவது சீசனை மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.