ஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்து உள்ளார். மறைந்த அரசியல் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக அறியப்பட்டார். இவரது மறைவிற்கு பிறகு அக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எனும் தனிக் கட்சியை ஆந்திராவில் ஏற்படுத்தினார்.

பின்னர் 2014 இல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்ற இவர் தொடர்ந்து தனது கடினமான உழைப்பாலும் மக்களிடம் பெற்ற நல்ல பெயராலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆட்சி அமைத்தார். தற்போது அவரது தங்கை தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் ஆட்சியை கொண்டு வரப்போவதாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேலும் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக ஐதராபாத்தில் இருந்து கார் மூலம் பேரணியாகச் சென்ற அவர் சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்ற ரஜினி பட வசனத்தையும் கூட்டத்தினரிடையே பேசியிருந்தார். தெலுங்கானாவில் ஏற்கனவே ராஷ்டிரிய சமீதி, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலமாக உள்ள நிலையில் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகளும் ஆந்திர மாநில முதல்வரின் தங்கையுமான ஷர்மிளா புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது அம்மாநிலத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மேற்வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு...!அநியாயமாக ஒருவர் பலி....!

மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கர்ப்பத்தின்போதே மீண்டும் கர்ப்பமான இளம்பெண்… அதிசயச் சம்பவம்!

ஒரு பெண் கருவுற்று இருக்கும்போதே மீண்டும் அப்பெண் கர்ப்பம் கொள்ள முடியும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ஒரு தகவல்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்… என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஷிவாங்கி வேற லெவல், அவரோடு என்னை கம்பேர் பண்ண வேண்டாம்: சீரியல் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகை ஒருவரை ஷிவாங்கியுடன் ஒப்பிட்டு மீம் ஒன்று வெளியாகி வைரல் ஆனதை எடுத்து 'தயவு செய்து என்னை ஷிவாங்கியுடன் ஒப்பிட வேண்டாம்,

'குக் வித் கோமாளி' சீசன் 3க்கு செல்கிறாரா பிக்பாஸ் சுசி? அவரே அளித்த பதில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் இந்த சீசன் முடிவடைவதை எண்ணி ரசிகர்கள் மட்டுமின்றி 'குக்'களும், கோமாளிகளும் மிகுந்த