close
Choose your channels

ஐபிஎல் ஏலத்தில் லிட்டில் சச்சின்? குவியும் வாழ்த்துகள்!

Saturday, February 6, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டையே இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இந்நிலையில் அவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டி பதிவு செய்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சர்வதேச ரசிகர்களுக்கும் ஒரு லெஜண்டாகவே திகழ்ந்து வந்தார். இதனால் அவரை மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், டெண்டுல்யா எனச் செல்லமாக ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சச்சினுக்கு தொடர்ந்து ரசிகர்கள் இன்றுவரை ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்றைய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவரை ரோல் மாடலாக வைத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் அவருடைய 21 வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கலந்து கொள்கிறார். அவருடைய அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.