தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்குமா??? மருத்துவர்களின் அறிவுரை!!!

  • IndiaGlitz, [Thursday,March 26 2020]


கொரோனா வைரஸ் பொருட்களின் மேல் தங்கிவாழும் தன்மையுடையது என்ற அறிக்கை வெளியானதில் இருந்து எந்தப்பொருட்களில் எவ்வளவு நேரம் தங்குமோ என்பதைக் குறித்து மக்கள் கடும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். பொருட்களைத் தொடலாமா? வேண்டாமா? எப்படி பொருட்களைக் கையாள்வது எனப் பலவித சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிலப் பொருட்களின் மேல் கொரோனா வைரஸ் தங்கி வாழும் தன்மையுடையது எனத் தெரிவித்தது. மேலும், எந்தப்பொருட்களில் எவ்வளவு நேரம் தங்கிவாழும் என்பதை, ஆராய்ச்சியாளர்களும் நிபுணர்களும் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். பொருட்களின் மேற்பரப்பு தன்மையைப் பொறுத்து கொரோனா வைரஸ் நாள் கணக்காக வாழும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். எஃகு, பிளாஸ்டிக் பொருட்களின்மீது கொரோனா வைரஸ் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரையிலும் தங்கிவாழும் தன்மையைக் கொண்டிருக்குமாம்.

தற்போது, தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்கிவாழும் தன்மையுடையதா? என்பது குறித்து சந்தேகம் எழுப்பப் பட்டு இருக்கிறது. Yale Institute மருத்துவர் Dr. Saad Omer கொரோனா பரவலுக்கு இடையில், தலைமுடியில் வைரஸ் பரவுமா என்பதைக் குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை எனத் தெரிவித்தார். ஆனால், தலைமுடியின் மேற்பரப்பில் தங்கும் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர்வாழாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், துருப்பிடிக்காத எஃகு போன்ற கடினமான பொருட்களைவிட மென்மையான முடி போன்ற பொருட்களில் தங்கிவாழும் கொரோனா வைரஸ் குறைந்த கால அளவில் இறந்துவிடும் தன்மைக்கொண்டது எனவும் குறிப்பிட்டார்.

Washington Medicine and Health Sciences மருத்துவர் Dr. Adam Friedman இது சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் எனத் தெரிவித்துள்ளார். உங்களது முடி கீழேவிழும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் அந்த முடியின்மீது தும்மும்போது குறைந்தது 3 நாட்களுக்கு அந்த வைரஸ் சாகாமல் உயிர்வாழக்கூடும். தலையில் இருக்கும்போது நிலைமை வேறாகவும் இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.

தலைமுடியில் தங்கி வாழும் அளவிற்கு கொரோனா வைரஸ் ஆற்றல் கொண்டது இல்லை என்றாலும் பாதுகாப்பான சூழ்நிலையில் உங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தற்போது அறிவுரை கூறிவருகின்றனர்.
 

More News

கொரோனா பாதித்தவர்களுக்கு ரகசியமாக உதவி செய்யும் பிரபல பாடகி

கொரோனா பாதித்த தனது ரசிகர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகி ஆரியானா க்ராண்டே ரகசியமாக நிதியுதவி அளித்து வரும் செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

கொரோனா போல சீனாவில் தொடங்கி ஐரோப்பாவை கலங்கடித்த ஒரு நோயை பற்றி தெரியுமா..?!

பிளேக். தொற்று நோய் என்றாலே பிளேக் என்று பெயர் வைக்கும் அளவிற்கு கொடூரமாக மக்களை கொன்று குவித்த ஒரு தொற்று நோய்.

பாஜக ஆதரவாளராக மாறி வருகிறாரா கமல்ஹாசன்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் 'உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும்

வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் கொரோனா வைரஸை பரப்புகிறதா???

செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்களிடம் இருந்து கொரோனா பரவுகிறது என்ற வதந்தியால் சீனாவில் பலர் தங்களது செல்லப் பிராணிகளைத் கைவிட்டு விடுகின்றனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி: இம்முறை சிக்கியது திருச்சி

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டாலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.