டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் புதல்வரும் தினத்தந்தி குழுமத்தின் அதிபருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் அவரின் சொந்த ஊரான தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணிடபண்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் அங்கு நிறுவப்பட்டு இருந்த ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அம்மாவட்டத்தின் மகளிர் அணி குழு கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். “வெற்றி நடை போடும் தமிழகம்“ என்ற பெயரில் மாவட்டம்தோறும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் தான் செல்லும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஊரின் சுதந்திரப் போராட்ட தியாகி, மறைந்த தலைவர்கள், முக்கியப் பிரபலங்களுக்கு தொடர்ந்து மரியாதையும் செலுத்தி வருகிறார். மேலும் மணிமண்டபம் இல்லாத தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற்பாட்டையும் செய்து வருகிறர். அந்த வகையில் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.

 

More News

கூழாங்கல் விருதுக்குப் பிறகு ரவுடி பிக்சர்ஸின் அடுத்த பட அறிவிப்பு…

“நானும் ரௌடிதான்“ படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் காதல் ஜோடிகளாக மாறினர்.

புகார் பெட்டி பிரச்சாரம் எல்லாம் மலையேறி விட்டது… எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகார் பெட்டி வைத்து அதன்மூலம் குறைகள் கேட்கப் பட்டது. அதுபோன்ற பிரச்சாரத்தை தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய “டான்“ நடிகர்… வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்: எத்தனை கோடி தெரியுமா?

எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வசூலை குவித்தது என்பதும்

'தனுஷின் 'கர்ணன்' படத்தின் சூப்பர் அப்டேட்; கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்