close
Choose your channels

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மாலை அணிவித்து மரியாதை!

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் புதல்வரும் தினத்தந்தி குழுமத்தின் அதிபருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் அவரின் சொந்த ஊரான தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணிடபண்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் அங்கு நிறுவப்பட்டு இருந்த ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அம்மாவட்டத்தின் மகளிர் அணி குழு கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். “வெற்றி நடை போடும் தமிழகம்“ என்ற பெயரில் மாவட்டம்தோறும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் தான் செல்லும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஊரின் சுதந்திரப் போராட்ட தியாகி, மறைந்த தலைவர்கள், முக்கியப் பிரபலங்களுக்கு தொடர்ந்து மரியாதையும் செலுத்தி வருகிறார். மேலும் மணிமண்டபம் இல்லாத தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற்பாட்டையும் செய்து வருகிறர். அந்த வகையில் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.