close
Choose your channels

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம்!!!

Sunday, March 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம்!!!


கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்நாட்டில் இதுவரை 25,493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், 7 பேருக்கு நோய் தொற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நியூ ஜெர்சியில் வாழும் ஒரு குடும்பம் சமீபத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்திக்கும்படியான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்ச்சியில் 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ மற்றும் அவரது ஆறு பிள்ளைகளின் குடும்பங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சிக்கு சென்று வந்த மூதாட்டி கிரேஸ் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரையடுத்து அதே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும், குடும்பத்தில் உள்ள மற்ற 20 பேரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்பதைக் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.