close
Choose your channels

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மூன்றாவது உயிர் பலி!!!

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மூன்றாவது உயிர் பலி!!!

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டு மும்பை கஸ்தூரிபா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து இருக்கிறது.
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,164 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 182,723 பேருக்கு உலகம் முழுக்க தொற்று இருப்பதாகவும் கணிக்கப் பட்டு இருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் 157 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பினைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மார்ச் 18 முதல், மார்ச் 31 வரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைத் தொடர்பு வசதிகளை இந்திய சுகாதாரத் துறை நிறுவனம் அறிமுகப் படுத்தி இருக்கிறது. தற்போது ஒவ்வொரு மாநிலங்களாக தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. கொரோனா அச்சத்தால் இந்திய வர்த்தகத் துறை கடும் சரிவை சந்தித்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் மார்ச் 11 அன்று கர்நாடகாவில் 76 வயதான முதியவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். அவர் சவுதி அரேபியாவுக்கு ஒரு மாதகாலம் யாத்திரை சென்று திரும்பியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கர்நாடகா கலாபுரகியை சேர்ந்த முதியவரின் குடும்பத்தில் மேலும், 4 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகச் சந்தேகிக்கப் பட்டு ஞாயிற்று கிழமை அன்று பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.

பின்பு, மார்ச் 13 ஆம் தேதி டெல்லியில் 69 வயதான பெண் ஒருவர் பலியானார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இன்று (மார்ச் 17) மும்பையில் 64 வயதான முதியவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.