close
Choose your channels

மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

Friday, February 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் இறங்கி 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த பேரவையில் இருந்த தீபாவின் கணவருக்கும், தீபாவின் கார் டிரைவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தீபாவின் கணவர் தனிக்கட்சி ஆரம்பித்தார். இதனால் டிரைவர் ராஜாவின் கை, தீபா பேரவையில் ஓங்கியது

இந்த நிலையில் சமீபத்தில் டிரைவர் ராஜாவை கட்சியில் இருந்து தீபா நீக்கினார். இருப்பினும் டிரைவர் ராஜா ஒரு வழக்கில் சிக்கியபோது அவருக்கு ஆதரவாக போலிசாரிடம் தீபா வாக்குவாதம் செய்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி ஒன்றை தனது பேரவையில் அளித்துள்ளார். இன்று முதல் ராஜா, தலைமை நிலைய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.