close
Choose your channels

இந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி!!!

Thursday, October 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக இதுபோன்ற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை ஒவ்வொரு மாநிலங்களும் ஓயாது மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையிலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.

மேலும் இந்திய அளவிலேயே தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.