close
Choose your channels

வந்தால் ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன்: குஜராத் சிங்கப்பெண் சபதம்

Thursday, July 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குஜராத் மாநிலத்தின் சுகாதார அமைச்சரின் மகனின் நண்பர்கள் சாலையில் ஊரடங்கு நேரத்தில் சுற்றி திரிந்ததை கண்டித்த பெண் போலீஸ் அதிகாரி சுனிதா இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது. இந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ‘வந்தால் அதிகாரம் மிக்க ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன் என்று சவால் விட்டு சுனிதா கொடுத்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது

இந்த சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுனிதா, ‘நான் பெண் சிங்கம் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால் நான் உண்மையில் பெண் சிங்கம் இல்லை. ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி. நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். அனைத்து காவல் துறையினரும் இதேபோல் துணிந்து செய்ய மாட்டார்கள் என்று பொது மக்கள் கூறுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கூறும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

காக்கி சட்டையில் பவர் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அது இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதற்காக நான் ஐபிஎஸ் அதிகாரியாக தயாராகி வருகிறேன். அதிகாரம் மிக்க பதவி தான் எனக்கு வேண்டும் என்று கூறினார்

மேலும் அமைச்சர் மகன் குறித்த பிரச்சனை குறித்து அவர் கூறியபோது ’மக்கள் நடமாட்டம் சரியான காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அமைச்சர் மகனின் நண்பர்கள் எந்த காரணமும் இன்றி சுற்றித் திரிந்ததால் அவர்களை நான் தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் தான் மன உளைச்சலில் இருப்பதாக கூறிய சுனிதா, ‘ஐபிஎஸ் அதிகாரியாக தீவிர முயற்சி செய்வேன் என்றும் ஒருவேளை சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வியடைந்தால் வழக்கறிஞர் அல்லது பத்திரிக்கையாளராக மாற முயற்சிப்பேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பெண் சுனிதாவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.