39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்!!!

  • IndiaGlitz, [Saturday,September 26 2020]

கம்போடியா நாட்டில் எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகளவில் கன்னிவெடிகள் பதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மொத்த எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டும் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கன்னிவெடியில் சிக்கி உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கையும் அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை கன்னிவெடியில் சிக்கி 64 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கின்றனர் என்று ஒரு புள்ளிவிரவக் கணக்கும் வெளியாகி இருக்கிறது.

இந்த அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அரசாங்கமே தற்போது கன்னி வெடிகளை அகற்றவும் முடிவு செய்திருக்கிறது. மேலும் இந்தப் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தும்போது அவர்களுக்கு அதிக ஆபத்துகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் மாற்று வழிகளைக் குறித்து அதிகாரிகள் யோசித்து இருக்கின்றனர். அப்போதுதான் ஆப்பிரிக்காவில் உள்ள மாகவா எலியைப் பற்றிய செய்திகளை கம்போடியா நாட்டு அதிகாரிகள் கேள்விபட்டு ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மாகவா எனும் எலி ஒன்று கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றுவதில் கில்லாடி எனக் கேள்விப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த எலி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்த எலிக்கு கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றும் வகையில் பல்வேறுகட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி பயிற்சி பெற்ற மாகவா எலி வெறுமனே 7 ஆண்டுகளில் 39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

மேலும் வெடிக்காத நிலையில் இருந்த 28 பொருட்களையும் இந்த எலி பாதுகாப்பாக அகற்றி இருக்கிறது. மேலும் கன்னிவெடிகளை அகற்றும் பணியில் மாகவா எலி 1 லட்சத்து 41 சதுர அடி நிலத்தைத் தோண்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த அளவு 2 கால்பந்து மைதானத்திற்கு சமமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாகவா எலிக்கு இங்கிலாந்தில் உள்ள கால்நடை அமைப்பு ஒன்று தங்கப்பதக்கத்தை வழங்கி பாராட்டுத் தெரிவித்து இருக்கிறது. அப்போது வழங்கப்பட்ட பாராட்டு பத்திரத்தில் மனிதர்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதற்கு பாராட்டுகள் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

More News

குடும்பத் தலைவி என்றால் சும்மாவா??? மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு!!!

சாலை விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் இறப்புக்கு நஷ்ட ஈடு கேட்ட வழக்கு ஒன்றில் மகாராஷ்டிரா நீதிமன்றம்

கொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை!!! கொடூரச் சம்பவம்!!!

பெங்களூரு அடுத்த ஸ்ரீநகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின்

ATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்!!!

கொரோனா தாக்கத்தால் வறுமையில் வாடிய நபர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்த இளைஞர்

முழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார்.

எஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவரகள் நேற்று காலமான நிலையில் அவருடன் பழகிய நாட்களை திரையுலக பிரமுகர்கள் பகிர்ந்து கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.