close
Choose your channels

முதல் காதலியிடம் பணம் வாங்கி 2வது காதலிக்கு அபார்ஷன் செய்த இளைஞர்

Tuesday, December 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையை சேர்ந்த 23வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய ஒரு காதலியிடம் பணம் பெற்று இன்னொரு காதலிக்கு அபார்ஷன் செலவு செய்தது தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த அஸ்வின் பாண்டே என்பவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இந்த நிலையில் 30 வயது பெண் ஒருவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண் வசதியாக இருப்பதை அறிந்து அவ்வப்போது அவரிடம் சில காரணங்களை கூறி பணம் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் அந்த பெண்ணிடம் அஸ்வின் சுமார் ரூ.6.5 லட்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒருநாள் தற்செயலாக அஸ்வின் மொபைல் போனை அந்த பெண் பார்த்தபோது, அஸ்வினுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தார். அந்த பெண்ணின் நம்பரை தொடர்பு கொண்டபோது அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், சமீபத்தில்தான் அஸ்வின் ரூ.65 ஆயிரம் செலவு செய்து அபார்ஷன் செய்ததாகவும் கூறினார். அந்த ரூ.65 ஆயிரம் தான் கொடுத்த பணம் என்பதை அறிந்து ஆத்திரமடைந்த முதல் காதலி, இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து அவர்களில் ஒருவரை கர்ப்பமாக்கியது, இன்னொரு பெண்ணிடம் பொய் சொல்லி பணம் பறித்தது ஆகிய குற்றங்களை அஸ்வின் ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.