மீண்டும் ஒரு ஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்த கொடுமை!

  • IndiaGlitz, [Tuesday,February 05 2019]

கவுசல்யாவின் கணவர் உடுமலை சங்கர், அம்ருதாவின் கணவர் பிரணாய் என இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அவ்வப்போது ஆணவக்கொலை குறித்த திடுக்கிடும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர்களும், பெற்றோர்களின் மனதை மாற்றும் வரை பொறுமை காக்காமல் அவசர அவசரமாக திருமணம் செய்யும் காதல் ஜோடிகளாலும் இந்த ஆணவக்கொலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த வைஷ்ணவி என்ற கல்லூரி மாணவி ஒருவர் அவரது தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கல்லூரி மாணவி வைஷ்ணவி தன்னுடன் படிக்கும் இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும், அவரது காதலன் வேறு ஜாதி என்பதால் இந்த காதலுக்கு வைஷ்ணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த வைஷ்ணவி, தனது காதலனையே திருமணம் செய்யவுள்ளதாக கூறியதால் அவரது தந்தையே வைஷ்ணவியை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆந்திர போலீசார் வைஷ்ணவியின் பிணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

More News

மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் சவால்

மு.க.ஸ்டாலின் சமீபத்தில் இந்து முறைப்படி நடைபெறும் திருமணங்கள் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அவருடைய இந்த கருத்துக்கு திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மேகா ஆகாஷ் படங்கள் ரிலீஸ்

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ், இந்த படம் வெளிவரும் முன் ஒருசில படங்களில் ஒப்பந்தமாகி அந்த படங்களும்

முதல்முறையாக சசிகுமாருடன் இணையும் பிரபல நடிகை

கடந்த ஆண்டு சசிகுமார் நாடித்த 'அசுரவதம்' திரைப்படம் மட்டுமே வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் கடந்த பொங்கல் தினத்தில் வெளிவந்த 'பேட்ட' படத்தில் ரஜினியின் நண்பராக

அஜித் போன்று அரசியல் அறிக்கை விட்ட சூப்பர் ஸ்டார்

சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்த நிலையில் அஜித் ரசிகர்கள் தமிழகத்தில் தாமரையை மலரச்செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

'தளபதி 63' படப்பிடிப்பு எப்போது முடியும்? புதிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.